search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா கடத்தல்"

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று சிங்காரப்பேட்டை புறவழி சாலை நாயக்கனூர் பிரிவு ரோட்டில் அதிகாலை வந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காரப்பேட்டை போலீசார் காரை சோதனை செய்யும் போது அந்த காரில் தடை செய்யப்பட்ட குட்கா 12 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்த உடனே வண்டி ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஊத்தங்கரையில் உள்ள பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊத்தங்கரை வழியாக அடிக்கடி இதுபோன்று குட்கா கடத்தும் வாகனங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் வண்டலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர், சோழவரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் படி மீஞ்சூரில் உள்ள கடைகளுக்கு குட்கா பதுக்கி விற்ற ஜெகன், வண்ணிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஒரு கடையில் சோதனை நடத்தியபோது குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
    • கடையின் உரிமையாளர் தங்கதுரை, சிவலிங்கம் .ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் அடுத்த பொத்தேரி பாரதியார் தெருவில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஒரு கடையில் சோதனை நடத்தியபோது அங்கு மூட்டை முட்டைகளாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. சுமார் 210 கிலோ குட்கா, புகையிலையை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் தங்கதுரை, சிவலிங்கம் .ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
    • ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் சுங்கசாவடி அருகே இன்று அதிகாலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போலீசார் பாலகிருஷ்ணன், கோவிந்தன், ஏட்டு காவேரி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4.30 மணிக்கு ஓசூரில் இருந்து செவ்வாய்பேட்டைக்கு சொகுசு கார் வந்தது.

    இந்த காரை சோதனை செய்த போது அதில் சுமார் 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன் உதவி கமிஷனர் மற்றும் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பிடிப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பார்வையிட்டனர். இவற்றை காரில் கடத்தி கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலம் பாடுமேர் பகுதியை சேர்ந்த டிரைவர் கல்யாண் சிங் (24) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தான், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள கடை உரிமையாளர் தேவா என்பவருக்கு இந்த ஹான்ஸ் மற்றும் குட்கா கொண்டு செல்வதாகவும், அவருடைய முகவரி ஏதும் தனக்கு தெரியாது எனவும், வெளியூரில் இருந்து இவற்றை கடத்தி கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கல்யாண் சிங் மற்றும் அந்த காரில் மாற்று டிரைவராக பணிபுரிந்த செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா(41) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஹான்ஸ் மற்றும் குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சொகுசு காரில் 20 மூட்டை குட்கா கடத்தி கொண்டு வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
    • கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார், வனத்துறையினர் இணைந்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு வழக்கம் போல் பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இரவு 8 மணி அளவில் பண்ணாரி சோதனை சாவடி வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) என்பவர் டிரைவராகவும், சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) என்பவர் கிளீனராகவும் இருந்தது தெரிய வந்தது. வேனில் வெங்காய லோடு இருப்பதாகவும் அவை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு எடுத்து செல்வதாகவும் அவர்கள் கூறினர்.

    எனினும் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வெங்காய மூட்டை அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விமல் பாக்கு, பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,281 கிலோ புகையிலை பொருட்கள் வெங்காய லோடு அடியில் மறைத்து வைத்து கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரன், பிரமோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,281 கிலோ போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இந்த போதைப் பொருட்களை மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். மேட்டுப்பாளையத்திற்கு யார் சொல்லி அவர்கள் இந்த போதைப் பொருட்களை கடத்தி சென்றனர். இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3,54,000-மதிப்பிலான 615 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் சிங் (22)மற்றும் பரத் சிங் (40) ஆகிய இருவரும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு விற்பனைக்காக 2 கார்களில் கடத்தி சென்றது, தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

    • குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான சுரேசிடம் இருந்து ரூ.50ஆயிரம் ரொக்கம், 2 மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    போரூர்:

    கோயம்பேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குட்கா சப்ளை நடப்பதாக துணை கமிஷனர் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    கோயம்பேடு நூறடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான குட்கா மூட்டைகள் இருந்தன.

    இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி அப்பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கைதான சுரேசிடம் இருந்து ரூ.50ஆயிரம் ரொக்கம், 2 மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பெங்களூரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் குட்கா, புகையிலை பொருட்களை வரவழைத்து அதனை மாங்காட்டில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து சென்னை முழுவதும் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. குட்கா கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • புகையிலை பொருட்களை அம்பை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியது தெரியவந்தது.
    • புகையிலை மூட்டைகளை லோடு ஆட்டோவுக்கு மாற்றிக் கொண்டிருந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே லாரியில் இருந்து லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை அம்பை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் ரூ. 4.10 லட்சம் மதிப்பிலான 530 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 4 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் அம்பையை சேர்ந்த சூர்யமாதவன் (23), எடிசன் (24), திருவாலீஸ் வரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி (30), வி.கே.புரத்தை சேர்ந்த தியாகராஜன் (29) என்பது தெரியவந்தது.

    லாரி டிரைவரான தியாகராஜன், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு ஏற்றி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்தபோது திருவனந்தபுரத்திற்கு மெடிக்கல் பொருட்களை ஏற்றி உள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அவரிடம் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி புகையிலை பொருட்களை லாரியில் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    நெல்லை வந்ததும், லோடு ஆட்டோ டிரைவரான எடிசன் அவரை முன்னீர்பள்ளத்திற்கு வரச்செய்து அங்கு வைத்து புகையிலை மூட்டைகளை லோடு ஆட்டோவுக்கு மாற்றிக் கொண்டிருந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் கொள்ளை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் விடுதிகளில் சோதனை, வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கமலக்கண்ணன், கோபிநாத், மணிகண்டன் ஆகியோர் களக்காட்டூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா 15 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வாலாஜாபாத் ஆறுமுகம் பேட்டையை சேர்ந்த பூபதி(வயது 34) என்பதும், குட்காவை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி போலீசுக்கு தகவல்.
    • போலீஸ் சோதனை செய்த போது ஒரு வீட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சோதனை செய்த போது ஒரு வீட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக முசாம்பீர் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • சென்னை ஐகோர்ட்டில் ஆணையரின் உத்தரவுக்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
    • தடை நீக்கி உயர்நீதிமன்றம் ஆணையிட்டு உள்ள காரணத்தால் உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளோம்.

    திருச்சி:

    தமிழகத்தில் பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2011ல் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களை கடத்தும் நபர்கள் மீதும், விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குட்கா பிடிபட்டால் அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சீல் வைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஆணையரின் உத்தரவுக்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதில் ஆணையரின் குட்கா விற்பனை தடை ஆணையை கடந்த 25-ம் தேதி நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் தங்கள் அதிரடி சோதனையை நிறுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் பாபுவிடம் கேட்டபோது,

    தடை நீக்கி உயர்நீதிமன்றம் ஆணையிட்டு உள்ள காரணத்தால் உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளோம். இனிமேல் அலுவல் ரீதியான அறிவிப்பு வந்த பின்னர் அதன்படி எங்களது நடவடிக்கை இருக்கும் என்றார்.

    அதேபோன்று காவல் துறையும் எல்லா கடைகளிலும் ரெய்டு நடத்த முடியாது. கோட்பா சட்டத்தின் கீழ் பள்ளிகள், அருகாமையில் உள்ள கடைகளில் குட்கா விற்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

    இதற்கிடையே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குட்கா தடை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், முற்றிலும் தடை விதிப்பதற்கு சட்டம் ஏற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    தற்போதைக்கு உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையின் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதால் குட்கா வியாபாரிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ×